Breaking News

மனோ வார்த்தை தவறியதால் : கிருஷ்ணாவிடம் தாவிய வேலணை வேணியன்.!

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோகணேஷன் உள் ளுராட்சி மன்ற தேர்தலின் போது தனக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்றத் தவறியுள்ளாா்.

பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளு ராட்சி தேர்தல் பிரசார நடவடிக்கை களின் போது தனது பெயர் தேசிய பட்டியலில் இருப்பதாக்க கூறினார். எனினும் தேர்தலில் பின்னர் வெள்ள வத்தை தெற்கு பிரதேச சபையை நான் கோரி இருந்த போதிலும் அத னைத் தர மறுத்தமையின் காரணமா கவே கட்சியில் இருந்து விலகி நவோதய மக்கள் முன்னணியுடன் இணை வதாக வேலணை வேணியன் தெரிவித்துள்ளாா். 

கொழும்பு பிரைட்டன் ஹோட்டலில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வேலணை வேணியன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ஜனநாயக மக்கள் முன்னணி யின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தேர்தல் பிரசாரத்தின் போது எம க்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. 

எனக்கு மாத்திரமல்லாது கட்சியில் அங்கம் வகித்த இளைஞர்களுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் தவறியமையால் சுமார் 17 இளைஞர் உறுப்பினர்கள் இது வரையில் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். அரசியலில் இலாபம் தேடுவதும் உழைப்பதும் என்னுடைய நோக்கம் அல்ல. 

மக்களுக்கு சேவை வழங்குவது மாத்திரமே எமது நோக்கமாகும். அதனா லேயே மக்களுக்கு பல வருடங்களாக சேவையாற்றிவரும் நவோதய மக்கள் முன்னணியில் இணைந்துள்ளேன். 

நாட்டில் தற்போது பல கட்சிகள் காணப்பட்டாலும் வறிய மக்களுக்கான சேவையை வழங்கும் கட்சியாக நவோதய மக்கள் முன்னணியை இனங் கண் டமையினாலேயே அக்கட்சியுடன் கை கோர்த்துள்ளேன். தலைமைத்துவங்க ளின் சுய நல நோக்கங்களின் காரணமாக பல இளைஞர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

மேலும் கட்சியிலிருந்து விலகும் அல்லது விலகிய எந்தவொரு உறுப்பினரி டமும் கட்சி தலைவர் மனோகணேஷன் எச் சந்தர்ப்பத்திலும் சிறந்த ஒரு கலந் துரையாடலில் ஈடுபடவில்லை. ஜனநாயக மக்கள் முன்னிணியின் செயலாள ருடனான முரண்பாடுகள் காரணமாக பல உறுப்பினர்கள் விலகியதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அது எந்த அளவில் உண்மையென எமக்கு தெரியாது எனினும் அவ்வாறான பாதிப்புக்கள் கட்சிக்குள் தென்படுகின்றது.