நாடக நடிகை துஷானி நீரில் மூழ்கி பலி.!
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை யடிபேரிய பிர தேசத்தில் களனி கங்கையில் நீராடச் சென்ற யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று நண்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலி ஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான கண்டி புப்புர ஸ்ஸ பகுதியை சேர்ந்த துஷானி த சில்வா தொலைக்காட்சி ஒன்றின் நாடக நடிகை ஆவாா்.
கண்டியில் இருந்து தனது குடும்பத்துடன் கித்துல்கலவிற்கு சுற்றுலா சென்றி ருந்த போது, நீராடச் சென்ற இவர் இவ் அனர்த்தத்திற்கு முகங் கொடுத்து ள்ளார்.
இவர் நீரில் முழ்கி காணாமல் போயுள்ள நிலையில், குடும்ப உறவி னர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடியுள்ளதை தொடர்ந்து இவ ரின் சடலம் நீரில் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருந்து மீட் கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதியின் சடலம் கிதுல்கல வைத்தியசாலையில் பிரேத அறை யில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலி ஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.