மாகாண சபை தேர்தல் திகதி நிர்ணயம் குறித்த தீர்மானம்..?
மாகாண சபை தேர்தல் நடத்துவதற்கான திகதியை நிர்ணயிப்பது குறித்து நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி உட்பட ஒரு சில அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பு தீர்மானம் எதுவும் இன்றி முடிவுக்கு வந்தது.
இச் சந்திப்பு நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. இதன்போது பல கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாகாண சபை தேர்தலை பழைய விகிதாசார முறைமையில் நடத்துவதற்கு ஏற்கனவே கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதனையடுத்து மாகாண சபை தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.