Breaking News

மாகாண சபை தேர்தல் திக­தி நிர்ணயம் குறித்த தீர்­மானம்..?

மாகாண சபை தேர்தல் நடத்­து­வ­தற்­கான திக­தியை நிர்­ண­யிப்­பது குறித்து நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் ஐக்­கிய தேசிய முன்­னணி உட்­பட ஒரு சில அர­சியல் கட்சி தலை­வர்­க­ளுக்கும் இடையில் நடந்த சந்­திப்பு தீர்­மானம் எதுவும் இன்றி முடி­வுக்கு வந்­தது. 

இச் சந்­திப்பு நேற்று பிர­தமர் ரணில் விக்கிர­ம­சிங்க தலை­மையில் அலரி மாளி­கையில் நடை­பெற்­றுள்­ளது. இதன்­போது பல கட்­சி­களின் தலை­வர்கள் கலந்து கொண்­டனர். மாகாண சபை தேர்­தலை பழைய விகி­தா­சார முறை­மையில் நடத்­து­வ­தற்கு ஏற்­க­னவே கட்சி தலை­வர்கள் கூட்­டத்தின் போது ஏக­ம­ன­தாக தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. 

இத­னை­ய­டுத்து மாகாண சபை தேர்­த­லுக்­கான திக­தியை நிர்­ண­யிப்­பது குறித்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற கூட்டத்தின் போது தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.