ஸ்ரீலங்காவில் அமைச்சரவை மாற்றம் இன்று - யாழ் மாவட்ட எம்.பிக்களுக்கு பதவிகள்?
ஸ்ரீலங்காவில் அமைச்சரவை மாற்றம் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள் ளதாக அரச மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து வாக்களித்த சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள் பதவிகளை இராஜி னாமா செய்துள்ளனர்.
இதனையடு த்து அமைச்சரவையில் 6 அமைச்சர்க ளுக்கான வெற்றிடம் காணப்படுகி றது.
சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, பிரியங்கர ஜயரத்ன, ஜோன் செனவிரத்ன ஆகியோரே இவ்வாறு பதவியிலிருந்து விலகி யுள்ளனர்.
இவ்வாறு வெற்றிடமாக இருக்கின்ற அமைச்சுப் பதவிகளை ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெற்றிடத்திற்கு சுதந்திரக் கட்சியில் தற் போது இராஜாங்க அமைச்சர்களாக உள்ளவர்களுக்கு வழங்கவும் தீர்மானித்தி ருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரவிக்கின்றன.
குறிப்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற் றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோருக் கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்க ளிப்பிலிருந்து விலகி நின்ற சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதியை சந்தி த்து கலந்துரையாடவுள்ளனா்.