Breaking News

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கிடையில் அவசர சந்திப்பு.!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற் கும் இடையில் இன்று திங்கட்கிழமை சந்திப்பு நடைபெறவுள்ளது.

சட்ட ஒழுங்கு மற்றும் அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இத் தகவலை வெளியிட்டுள்ளார். இச் சந்திப்பில் அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் தொடர்பில் விரிவாக கல ந்துரையாடப்படுமென எதிா்பாா்க்கப்ப டுகிறது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவளித்து, தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்ற ஆறு அமைச்சர் களுக்கு பதிலாக நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சர்கள் குறித்தும் இதன் போது ஆராயப்படவுள்ளது.