தமிழின தலைவர் பிரபாகரன்-பிரபலங்களின் மேடையில் முழக்கம்(காணொளி)
பிரபாகரன் எமது தலைவன்,தமிழ் தேசிய இனத்தின்
முகம், முகவரி ,அடையாளம் என செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.
முகம், முகவரி ,அடையாளம் என செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.
அவள் விகடன் விருதுவழங்கும் விழாவில் கலந்துகொண்ட சீமானிடம் பிரபலங்கள் பலரின் புகைப்படங்கள் தொடர்பாக கேள்விகள் இடம்பெற்றது இதன்போதே கமல்,ரஜனி,மோடி உள்ளடங்கலாக தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படமும் காண்பிக்கப்பட்டது.
பல சினிமா திரைப்படங்கள் கலந்துகொண்ட நிகழ்விலேயே தலைவர் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டபோது பலத்த கரகோசம் எழுந்ததுடன் மக்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக சீமானும் பதிலளித்திருந்தார்.
இதில் ரஜனி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சீமான் தகப்பன் என்பவன் என்னை பெற்றவனாக இருக்க வேண்டும். என் இரத்தவனாக இருக்க வேண்டும், மொழி புரியாதவன் இறைவனாக முடியாது எமது வலி தெரியாதவன் எமக்கு தலைவனாக முடியாது எனவும் பதிலளித்திருந்தார்.
கமல்,விஜெய்,சரத்குமார்,ராஜா, விஜயகாந்,மோடி,விஜயகாந் மற்றும் சுப்பிரமணியம் சுவாமி போன்றவர்களையும் சீமான் விட்டுவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.