Breaking News

கூட்­ட­மைப்பின் கிழக்கு மாகாண மேதினக்கூட்டம் மே முதலாம் திகதி ஆரம்பம்.!

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏற்­பாடு செய்­துள்ள கிழக்கு மாகா­ணத்­திற்­கான மேதினக் கூட்­டமும், தொழி­லாளர் பண்­பாட்டுப் பேர­ணியும் எதிர்­வரும் மே மாதம் முதலாம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை பிற்­பகல் இரண்டு மணிக்கு வெல்­லா­வெ­ளியில் ஆரம்பமாகவுள்ளது. 

போர­தீ­வுப்­பற்று பிர­தேச சபையின் தவி­சாளர், யோ.ரஜனி தலை­மையில் தொழி­லாளர் தின நிகழ்வு நடைபெற­வுள்­ளது. முன்­ன­தாக தொழி­லாளர் பண்­பாட்டுப் பவனி போர­தீ­வுப்­பற்று பிர­தே­ச­சபை அமைந்­துள்ள வெல்­லா­வெளிச்  சந்­தி­யி­லி­ருந்து ஆரம்­ப­மாகி, மே தினப் பொதுக்­கூட்டம் இடம்பெற­வுள்ள வெல்­லா­வெளி பொது விளை­யாட்டு மைதா­னத்தை சென்­ற­டை­ய­வுள்­ளது.

இதனைத் தொடர்ந்து நடைபெறும் மேதினக் கூட்­டத்தில், இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் பொதுச் செய­லாளர் கி.துரை­ரா­ஜ­சிங்கம் மேதின அறிக்கை வெளிப் ­ப­கிர்­வினை வெளிப்­ப­டுத்­த­வுள்ளார். 

இந்த மே தினக்­கூட்­டத்தில், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, திரு­கோ­ண­மலை மாவ ட்­டங்­களைச் சேர்ந்த தமிழ்த் தேசியப் பற்­றா­ளர்கள் ஒன்று கூடி, இலங்கைத் திரு­நாட்டின் பன்­முகத் தன்­மையை உரத்துச் சொல்லி வலி­யு­றுத்­துதல், தமி ழ்த் தேசி­யத்தின் நியா­யங்­க­ளுக்கு வலுச்­சேர்த்தல், கூட்­டாட்­சியை கொலு­வேற்றும் உரிய அர­சியல் அமைப்பின், 

உரு­வாக்­கத்தை முன் நகர்த்­து­மாறு அழுத்தம் கொடுத்தல், நில மீட்பு, தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை, மீள் குடி­யேற்றம், காணாமல் ஆக்­கப்­பட் டோர் தொடர்­பான கரி­சனை, போர் இடம்பெற்ற காலத்தில் வித­வை­யாக்­கப்­பட்­டோரின் பொருளாதார மேம்பாடு, இளையோரின் மேம்பாடு, வேலை வாய் ப்பு உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி தீர்மானங்களையும் நிறைவேற்றவுள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.