Breaking News

யாருக்காவது துணிவிருக்கா? சுமந்திரன்.!

இவ் அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என நான் எப்போதும் கூறிய தில்லையென  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார். தொட ர்ந்தும் கருத்து தெரிவித்த அவர். நான் ஒரு போதும் இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என சொல்ல வில்லை.

ஆனால் மக்கள் மத்தியில் ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அவரசமாக எதிர் மாற்றம் தேவை என்றே நாங்கள் மேடை மேடையாக சொன்னோம். எங் களுக்கு அவசரமாக எதிர் மாற்றம் தேவையாக இருந்தது. வீடு பற்றி எரிகிறது வீட்டுக்குள் இருப்பவர்கள் எழும்பி வெளியே ஓட வேண்டுமென கேட்கின்றார் கள்.

அதான் அந்த தேர்தல். ஓட வேண்டாம் எரிகிற வீட்டினுள் இருந்து சாகுங்கள் என்பது தான் தேர்தலை பகிஸ்கரிக்க கோரியவர்களின் கோரிக்கை. அப்படி செத்தால் தான் இன வழிப்புக்கு மேலும் கூடுதல் ஆதாரம் கிடைக்குமென  நம் பினார்கள்.

அரசாங்கத்தை கொண்டு வந்ததற்கு பல விமர்சனங்கள் உண்டு. அவை அனை த்தையும் ஏற்றுக்கொள்கிறேன். சொன்ன எதனையும் அரசாங்கம் நிறைவேற்ற வில்லை.

ஆனால் 2005ஆம் ஆண்டு மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்கள்? தொடர்பில் கேள்வியை கேட்க யாருகாவது துணிவிருக்கா? அதனை விட மோசமான காரியமா நாங்கள் செய்துள்ளோம்? நாங்கள் சொல்லும் உண் மையை வெளியில் சொல்லுங்கள். சொல்லாததை சொல்லாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளாா்.