தாய்லாந்தின் 3 போர்க் கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் - காரணம் இதுவே!
தாய்லாந்து கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.
இதன்படி பன்பாகொன், மகுத்திராஜ குமான், பட்டனி ஆகிய மூன்று போர்க் கப்பல்களும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கையை வந்தடைந்துள்ளன.
இலங்கை கடற்படையின் சம்பிரதாய த்திற்கு அமைவாக கடற்படையின ரால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இத னைத் தொடர்ந்து தாய்லாந்து கடற் படையின் மாணவப் பயிற்சிப் படை யின் கட்டளைத் தளபதி ரியர் அட் மிரல் சொம்பொன் சூவிஹான்க் மற்றும் கப்பலின் கட்டளைத் தளபதி கெப்டன் நிவாட் உள்ளிட்ட குழுவினருடன் இலங்கை கடற்படைத் தலை மையக கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த ஊலுகேதென்ன சந்திப்பை மேற்கொண்டுள்ளனா்.
இச் சந்திப்பினிடையே இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நினை வுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இச் சந்திப்பை தொடர்ந்து இல ங்கை கடற்படையின் பல தரப்பட்ட உயரதிகாரிகளை தாய்லாந்து கடற்படை யின் உயர்குழு சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.
தொடர்ந்து 5 நாட்களுக்கு இலங்கையில் தங்கியிருக்கும் தாய்லாந்து கடற் படையினரும், அவர்களது 3 போர்க் கப்பல்களும், இலங்கை கடற்படையின ருடன் இணைந்து போர் பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள், போர்க்கால உத்திகள் என்பவற்றில் செயற்படவுள்ளனா்.
இவ் விடயங்களை அடுத்து எதிர்வரும் 9ஆம் திகதி தாய்லாந்து கடற்படை யினர் நாடு திரும்பவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ள ஊடக அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.