Breaking News

ரணிலின் கோரிக்கைக்கு இணங்க பிரேரணை வாபஸ்.!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்களிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விலக்கிக்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டு க்கொண்டதால் அந்த பிரேரணை விலக்கப்பட்டதாக தகவல் வட்டாரங்கள் புல ம்புகின்றன. 

நம்பிக்கையில்லா பிரேரணை தொட  ர்பான முடிவுகள் எதனையும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்திலேயே எடுக்க வேண்டு மென பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் கையளித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் எடு க்கப்பட்டதல்ல என தெரிவித்துள்ள பிரதமர், எனினும் ஐக்கிய தேசிய கட்சி யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் கருத்தின் காரணமாக இவ் விவகா ரம் குறித்து விரைவில் தீர்மானிக்கப்படுமென பிரதமர் தெரிவித்துள்ளாா்.