புத்தாண்டு நாளில் வலிகாமம் வடக்கில் உள்ள 700 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படுமா?
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து 700 ஏக்கர் நிலம் புத்தாண்டு தினத்தில் விடுவிக்கப்படுமென இராணுவம் தெரிவித்து நிலையில் இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்படும் காணிகளுக்கான வரை படம் கிடைக்கவில்லையென மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவித்து ள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன் யாழ். வந்த இராணுவ தளபதி மகேஷ் சேன நாயக்க புத்தாண்டு பரிசாக யாழ். மக் களுக்கு வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து ஒரு தொகை காணிகள் மக்களிடம் மீள வழங்கப்படுமெனத் தெரிவித்து ள்ளாா்.
இதற்கமைய 700 ஏக்கர் காணி மீள மக்களிடம் வழங்கப்படுமெனத் தெரிவிக் கப்பட்டதாகவும் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு இராணுவத்திடமிருந்து வரை படங்கள் கிடைக்கப்பெறவில்லையெனக் கூறும் மாவட்டச் செயலக வட்டா ரங்கள்.
கட்டுவனிலிருந்து மயிலிட்டிச் சந்தி வரையிலான பிரதான வீதியில், சுமார் 4 கிலோ மீற்றர் நீளமான பகுதி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளது.
பாதுகாப்புத் தரப்பினரின் முன்னரங்க வேலிகள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதனடிப்படையில் இந்த வீதியும், இதன் மேற்குப் புறமாகவுள்ள காணிகளும் விடுவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுவதாக மாவட்டச் செயலக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்புத் தரப்பினரின் உத்தியோகபூர்வ வரைபடம் கிடைக்காமல் எதனை யும் உறுதியாகத் தெரிவிக்க முடியாதென மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவித்துள்ளன.