16 சு.க.வினரும் இராஜினாமா நேற்றைய தினம்.!
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகளை நேற்று இராஜினாமா செய்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு ஆறு அமைச்சர்களும் 9 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் பிரதி சபாநாயகரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது இராஜினாமா கடிதங்களை கையளித்தனர்.
குறித்த 16 பேரின் இராஜினாமா கடிதங்களையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றுமாலை விசேட சந்திப்பு ஒன்றை நடத்திய குறித்த சுதந்திரக் கட்சியின் 16 எம்.பி. க்களும் சநதிப்பின் முடிவில் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேம்ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, எஸ்.பி. திசாநாயக்க, ஜோன் செனவிரட்ன, சந்திம வீரக்கொடி ஆகிய அமைச்சரவை அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, டிலான் பெரெரா, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, சுசந்த புஞ்சிநிலமே, டி.பி. ஏக்கநாயக்க ஆகியோரும் பிரதியமைச்சர்களான சுமேதா ஜி. ஜயசேன, அனுராத ஜயரட்ன, தாரனாத் பஸ்நாயக்க, லக்ஷ்மன் வசந்த பெரெரா மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோரே நேற்றைய தினம் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்தனர்.
இது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர கேசரிக்கு நேற்றிரவு கேசரிக்கு கருத்து வெ ளியிடுகையில்
நாங்கள் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிவிட்டோம். இன்று இரவு ( நேற்று) 12 மணியிலிருந்து நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்கள் இல்லை.
எமது இராஜினாமாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண் டார். அத்துடன் தொடர்ந்தும் எங்களை சுதந்திரக் கட்சியில் இருந்து அரசியல் செய்வதற்கு ஆசிர்வதிப்பதாக கூறினார். நாங்கள் மகிழ்ச்சியுடன் வெளியேறுகின்றோம். அத்துடன் ஜனாதிபதி வெளிநாடு செல்லவுள்ளார்.
ஜனாதிபதி வெளிநாடு சென்று திரும்பியதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் இருக்குமா என்பது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
இதனையடுத்து இன்று அல்லது நாளை இடம்பெறவுள்ள புதிய அமை ச்சரவை அமைச்சர்களின் பதவியேற்பில் குறித்த 16 பேரின் பதவிகளுக்கு சுத ந்திரக் கட்சியின் வேறு எம்.பி. க்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
கடந்த நான்காம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் குறித்த 16 எம். பி. க்களும் பிரதமருக்கு எதிராக வாக்களித்தனர்.
எனினும் பிரதமருக்கு எதிரான குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமருக்கு எதிராக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் 16 பேரும் பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கப்படவேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்தனர்.
அத்துடன் குறித்த 16 எம்.பி. க்களும் தாங்கள் அமைச்சு பதவிகளை கைவிட தயார் என்றும் அதற்கு ஜனாதிபதி அனுமதிக்க வேண்டுமெனக் கூறி வந்தனர். மேலும் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் சுதந் திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டிருக்கவில்லை.
இந்த பின்னணியிலேயே நேற்று நள்ளிரவு 16 பேரும் தமது அமைச்சுப் பத வி்களை இராஜினாமா செய்தனர்.
அதனையடுத்து இன்று அல்லது நாளை புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க வுள்ளனர்.