முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று இந்தியாவுக்கு பயணம்.!
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று இந்தியாவுக்கு பய ணம் ஆகவுள்ளாா்.
ஆன்மீக சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொண்டு இன்று தமிழகம் செல் லும் அவர் இருவார காலம் அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழகம் செல்லும் முதலமை ச்சர் சில சந்திப்புக்களிலும் கலந்துகொள்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக முதலமைச்சர் தரப்பு வட்டார ங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வடமாகாண சபை யின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எத்தகைய முடிவினை எடு ப்பார் என்ற பரபரப்பான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரனை அடுத்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கும் உத்தேசம் இல்லையென கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து விரைவில் தெரிவிக்கலாமென எண்ணியுள்ளனா்.
ஆன்மீக சுற்றுலாவை மேற்கொண்டு இந்தியா செல்லும் முதலமைச்சர் நாடு திரும்பியவுடன் தனது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான விடயத்தை தெரிவிப்பாா் என எதிர்பாா்க்கப்படுகின்றது.