Breaking News

முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று இந்தியாவுக்கு பயணம்.!

வட­மா­காண முத­லமைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் இன்று இந்­தி­யா­வுக்கு பய ணம் ஆகவுள்ளாா். 

ஆன்­மீக சுற்­றுப்­ப­யணம் ஒன்­றினை மேற்­கொண்டு இன்று தமி­ழகம் செல் லும் அவர் இரு­வார காலம் அங்கு தங்­கி­யி­ருப்பார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தமி­ழகம் செல்லும் முத­ல­மை ச்சர் சில சந்­திப்­புக்­க­ளிலும் கலந்­து­கொள்­வ­தற்­கான வாய்ப்­புக்கள் இருப்­ப­தாக முத­ல­மைச்சர் தரப்பு வட்­டா­ர ங்கள் தெரி­வித்­துள்­ளன. எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் வட­மா­காண சபை யின் பதவிக்காலம் முடி­வ­டை­ய­வுள்­ளது. 

இந்த நிலையில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் எத்­த­கைய முடி­வினை எடு ப்பார் என்ற பர­ப­ரப்­பான நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை அடுத்த மாகாண சபைத் தேர்­தலில் கூட்­ட­மைப்பின் சார்பில் கள­மி­றங்கும் உத்­தேசம் இல்லையென கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்­திரன் கருத்துத் தெரி­வித்­துள்ள நிலையில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தனது அடுத்த கட்ட நிலைப்­பாடு குறித்து விரைவில் தெரிவிக்கலாமென எண்ணியுள்ளனா். 

ஆன்­மீக சுற்­று­லாவை மேற்­கொண்டு இந்­தியா செல்லும் முத­ல­மைச்சர் நாடு திரும்பியவுடன் தனது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான விடயத்தை தெரிவிப்பாா் என எதிர்பாா்க்கப்படுகின்றது.