Breaking News

பிரதி சபாநாயகர் மீது தாக்குதல்? விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவு!

பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால மீது ஐக்கிய தேசியக் கட்சியின் அமை ச்சர் நவின் திஸாநாயக்க தாக்குதல் நடத்த முயற்சித்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்படுமென சபாநாயகர் கரு ஜய சூரிய தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபா நாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது சபையில் எழு ந்த ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, பிரதமருக்கெ திரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடு ப்பின் இடையே பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால மீது அமைச்சர் நவின் திஸாநாயக்க தாக்குதல் நடத்த முயற்சித்தமை தொடர்பில் சபாநாயகரின் கவ னத்தில் எடுத்துள்ளாா். 

இவ் விடயமாக கருத்து வழங்கிய சபாநாயகர், இவ் விவகாரம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணையொன்றை மேற்கொள்ளவிருப்பதாக சபைக்குத் தெரியப்படுத்தினார். இதன்போது கருத்து வழங்கிய அமைச்சர் நவின் திஸா நாயக்க, எந்தவொரு விசாரணைக்கும் எந்த நேரத்திலும் தயாராகவே இருப்ப தாக தெரிவித்துள்ளாா்.