நம்பிக்கையில்லா தீர்மான விடயத்தில் ஜனாதிபதி எச்சரிக்கை !
பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்க ளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக ஐக் கியதேசிய கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தால் அவர்கள் பொது எதிரணியுடன் இணையக்கூடிய அபாயம் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமரிற்கு எதிராக வாக்களித்த ஸ்ரீல ங்கா சுதந்திரக்கட்சியின் பாராளு மன்ற உறுப்பினர்கள் குறித்த பேச்சு வார்த்தைகளிற்காக ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி சிறிசேனவை சந்தித்த வேளையே இவ்வாறான எச்சரி க்கையை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேர ணையை கைவிடுமாறு சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் அதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிளவுபடும் மேலும் கட்சியின் உறு ப்பினர்கள் பொது எதிணியுடன் இணையக்கூடும் எனவும் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பொதுஎதிரணி ஆட்சியமைக்ககூடிய சூழல் உருவாகலாம் என சிறிசேன எச்சரித்துள்ளார்.
அவ்வாறான நிலை உருவானால் தன்னால் எது வும் செய்ய முடியாத நிலை உருவாகலாம் எனத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் மங்கள சமரவீர ஹரின் பெர்ணா ன்டோ அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் தனக்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி சிறிசேன, ஏன் அவ்வாறான நிலையில் அமைச்சர வையில் இருக்கவேண்டுமெனக் கேள்வி எழுப்பியுள்ளார்.