முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைப்பதற்காக ஜனாதிபதியை நாடிய விஜயகலா!
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள் ளாா்.
நேற்றுக் காலை (16-05-2018) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனுக்கும் இடை யில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இவ்வேளை விஜயகலா மகேஸ்வரன் இது குறித்து ஜனாதிபதியிடம் கடிதமொ ன்றையும் கையளித்துள்ளாா்.
இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தாம் இது தொடர்பில் மக்களுக்கு வாக் குறுதி வழங்கி ஆதரவு பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.
இக் கடிதத்தின் பிரதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இறுதி யுத்தத்தின்போது பெருந்தொகையான அப்பாவிமக்கள் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி யாழ்ப்பாணம் மன்னார் முல்லைத்தீவு வவுனியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் பலியாகினர்.
படைத்தரப்பினருக்கும் புலிகளுக்குமிடையிலான பரஸ்பர மோதலிலும் தாக்குதல்களிலும் இத்தகைய உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருந்தன.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த உயிரிழப்புக்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததையடுத்து மே மாதம் சுதந்திரமான முறையில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது.
இவ்வாறு யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்படவேண்டியது அவசியமா னதாகும்.
இதற்கான தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும் என்று தங்களிடம் கோருகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.