Breaking News

முள்­ளி­வாய்க்­காலில் நினை­வு­த்தூபி அமைப்பதற்காக ஜனாதிபதியை நாடிய விஜயகலா!

இறுதி யுத்­தத்தில் உயி­ரி­ழந்த உற­வு­களை நினை­வு­கூர்ந்து முள்­ளி­வாய்க்­காலில் நினை­வு­த்தூபி அமைக்க உட­னடி நட­வ­டிக்கை எடுக்­க ­வேண்டுமென சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்வரன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள் ளாா். 

நேற்றுக் காலை (16-05-2018) ஜனாதிபதி செயலகத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும், சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்வரனுக்கும் இடை யில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

இவ்வேளை விஜயகலா மகேஸ்வரன் இது குறித்து ஜனா­தி­ப­தியிடம் கடி­த­மொ ன்­றையும் கையளித்துள்ளாா். 

இறுதி யுத்­தத்தின்போது உயி­ரி­ழந்த உற­வு­களை நினை­வு­கூர்ந்து முள்­ளி­வாய்க்­காலில் நினை­வு­த்தூபி அமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தாம் இது தொடர்பில் மக்களுக்கு வாக் குறுதி வழங்கி ஆதரவு பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். 

இக் கடி­தத்தின் பிரதி பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜ­ய­வர்த்­தன ஜனா­தி­ப­தியின் செயலாளர் ஒஸ்டின் பெர்­னாண்டோ பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் ஆகி­யோ­ருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:-

இறுதி யுத்­தத்தின்போது பெருந்­தொ­கை­யான அப்­பா­வி­மக்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். கிளி­நொச்சி யாழ்ப்­பாணம் மன்னார் முல்­லைத்­தீவு வவு­னியா ஆகிய மாவட்­டங்­களை சேர்ந்த மக்கள் இறுதி யுத்தத்தின்போது முள்­ளி­வாய்க்காலில் பலி­யா­கினர்.

படைத்­த­ரப்­பி­ன­ருக்கும் புலி­க­ளுக்­கு­மி­டை­யி­லான பரஸ்­பர மோத­லிலும் தாக்­கு­தல்­க­ளிலும் இத்­த­கைய உயிரிழப்புக்கள் ஏற்­பட்­டி­ருந்­தன.

2009ஆம் ஆண்டு இடம்­பெற்ற இந்த உயி­ரி­ழப்­புக்­களை நினை­வு­கூரும் வகையில் முள்­ளி­வாய்க்­காலில் நினைவேந்தல் நிகழ்வு நடத்­தப்­பட்டு வரு­கின்­றது. 

2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­த­தை­ய­டுத்து மே மாதம் சுதந்­தி­ர­மான முறையில் முள்ளிவாய்க்காலில் நினை­வேந்தல் நிகழ்வு நடத்­தப்­பட்­டது. 

 இவ்­வாறு யுத்­தத்தில் உயி­ரி­ழந்த உற­வு­களை நினை­வு­கூரும் வகையில் முள்­ளி­வாய்க்­காலில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்படவேண்டியது அவசியமா னதாகும். 

இதற்கான தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும் என்று தங்களிடம் கோருகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.