Breaking News

தமிழீழ விடுதலைக்கான அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாா் - சுவிசில் அறிவிப்பு.!

மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற சமர்களில் மரணி த்த விடுதலைப் புலி உறுப்பினர்களின்; நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வொ ன்று சுவிட்சலாந்தில் நடைபெற்றுள்ளது.  

19.05.2018 சனிக்கிழமை அன்று சுவிட் சலாந்தின் செங்காளன் மாநிலத்தில், 'நடுகல் நாயகர்கள் நினைவுகள் சும ந்த வணக்க நிகழ்வு' என்ற தலைப்பில் நடைபெற்ற இந் நிகழ்வை, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஒழுங் கமைத்துள்ளது. 

இவ் வணக்க நிகழ்வில் எழுச்சி நிகழ் வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளை யோர்களின் எழுச்சி நடனங்கள், சிறு வர்களின் இன உணர்வு மிக்க பேச்சுக் கள், கவிதைகள்; காலத்திற்கேற்ப கருப்பொருளை கொண்ட சிறப்புரையும் நடைபெற்றன. 

செங்காளன் மாநிலத்தில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வானது தமிழீழ விடுதலைக்கும் அதற்கான தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாடுகளுக்குமான மீள்தொடக்கப் புள்ளியாக காணப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள் ளாா்கள்.