Breaking News

கருணாவின் பெயரை பயன்படுத்தி சிலர் மக்களை ஏமாற்றுவதாக த.ஐ.சு.முன்னணி குற்றச்சாட்டு!

கருணா என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளி தரனின் பெயரை பயன்படுத்தி வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி சிலர் மக்களை ஏமாற்றி வருவதாக கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. 

கருணா தலைமையிலான தமிழர் ஐக் கிய சுதந்திர முன்னணியின் பெயரு க்கு அபகீர்தியை ஏற்படுத்தும் நோக்கி லேயே நிதி சேகரித்து மக்களைக் குழ ப்புகின்ற செயற்பாடுகள் மேற்கொள் ளப்பட்டு வருவதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் வருண் கமலதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி யின் அலுவலகத்தில் நேற்று (20.05.2018) மாலை நடைபெற்ற ஊடகச் சந்திப் பிலே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.