Breaking News

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் பிரிவுபசார வைபவம்!

திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றம் பெற்றுச் செல்லும் யாழ்ப் பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவை க்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்றைய தினம்(23-05-2018) புதன்கிழமை நடைபெற்றுள்ளது.


யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறை யீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராம நாதன் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்இ அரச சட்ட வாதி கள் நாகரட்னம் நிஷாந்த் திருமதி பிரிந்தா ரெஜிந்தன் ஆகியோ ரும் பங்கேற்ற னர். 

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற பதிவா ளர் திருமதி மீரா வடிவேற்கரசன் மேல் நீதிமன்ற வலயக் கணக்காளர் வெல்லவராஜன் ரதீஸ் மற்றும் உத்தி யோகத்தர்கள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவையைப் பாராட்டி உரை நிகழ்த்தினாா். 

மேலும் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து வாழ்த்துப் பாமலை மற்றும் நினைவுச் சின்னம் என்பனவும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நலன்புரிச் சங்கம் சார்பில் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் வழங்கினாா். 

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். 

கடந்த மூன்று ஆண்டுகளாக கடமையாற்றிய அவர் நீதிச் சேவை ஆணை க்குழுவின் சேவைப் பிரமாணத்தின் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக எதிர்வரும் 28ஆம் திகதி இடமாற்றம் பெற்றுச் செல்ல வுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.