காணாமல் ஆக்கப்பட்டோா் இராணுவ முகாம்களில் இல்லை என்கிறாா் - சேத்திய குணசேகர.!
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் இல்லையென சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சேத் திய குணசேகர ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் இருந்த இரா ணுவ முகாமை சேர்ந்த இராணுவ வீர ர்கள் தமது உறவுகளை கைது செய்து பின்னர் காணாமல் ஆக்க செய்தனர் என்றும் தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் கோரி யாழ்.மேல் நீதி மன்றில் ஆட்கொணர்வு மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம் மனு மீதான விசாரணையானது நேற்றைய தினம் நடைபெற்ற போது, மனுத்தாரர் தரப்பு சட்டத்தரணிகளான சுபாஜினி மற்றும் திருக்குமரன் ஆகி யோர், இவ் மனுத்தாரர்கள் தமது உறவுகளை இராணுவமே கைது செய்து சென்றதாகவும், தற்போதும் தமது உறவுகள் இராணுவ முகாம்களில் இருப்ப தாகவும், அதனை சிலர் கண்டதாகவும் கூறி வருவதுடன் அதனை உறுதியாக நம்பி வாதிட்டுள்ளனா்.
இதற்கு பதிலளித்து பிரதி சொலிஸ்ட.ர் ஜென்றல் சேத்திரி, குறித்த மனுத்தார ர்கள் கூறுவது போன்று எந்தவொரு இராணுவ முகாம்களிலும் காணாமல் போனவர்கள் இல்லை.
அவ்வாறிருந்தால் நானே முதலில் அவர்களை நீதிமன்றில் முன்னிறுத்தி அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுப்பேன். நாங்கள் தமி ழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல.
எனவே அவ்வாறான எவரும் இராணுவ முகாம்களில் இல்லையென தெரி வித்தார்.
இதனை தொடர்ந்து இராணுவ சட்டத்தரனி, ஜக்கிய நாடுகள் சபை யின் நிபுணர்கள் கூட வந்து இராணுவ முகாம்களை சோதனையிட்டனர்.
ஆனால் அவர்கள் கூட இராணுவ முகாம்களில் எவரும் இருப்பதாக கண்டறிய வில்லையெனத் தெரிவித்துள்ளனா்.