Breaking News

கருணாவின் பிரிவும் ஊடகவியலாளர்களின் படுகொலைகளும்- அனுபவப்பகிர்வு (காணொளி)

2004ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்ததைத் தொடர்ந்து கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் என்றுமில்லாதவாறு ஊடக வியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள்.

ஓட ஓட விரட்டப்பட்டார்கள். விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டார்கள். ஊடகவியலாளருக்கான கருணா குழுவின் (அல்லது பிள்ளையான் குழுவின்) பாய்ச்சலுக்குப் பலியான முதலாவது ஊடகவியலாளன் திரு. ஐயாத்துரை நடேசன். நடேசன் அவர் களின் படுகொலை பற்றியும், நடேசன் பற்றியும் சில சிரேஸ்ட ஊடக வியலாளர்கள் பகிர்ந்துகொண்ட சாட்சிகளை சுமந்து வருகின்ற  காணொளிகள் உங்கள் பாா்வைக்காக.