Breaking News

இராஜாங்க அமைச்சரின் மகனுக்கு பிணையில் விடுதலை.!

இராஜாங்க அமைச்சர் பலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண் டாரவை பிணையில் செல்ல சிலாபம் நீதிவான் நீதிமன்றம் அனுமதித்துள் ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை மதுபோதை யில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற் படுத்தியமை, பொதுச் சொத்துக்களுக் குச் சேதம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய் யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப் பட்டிருந்தார். 

இந் நிலையில் இன்று சிலாபம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்ததுடன் அவரது வாகன அனு மதிப் பத்திரத்தை அவரிடம் வழங்க மறுத்துள்ளது.