Breaking News

விசேட நிதியொதுக்கீட்டின் மூலம் கிளி.மாவட்ட அபிவிருத்திகளை முன்னெடுக்கவும்

விசேட நீதியொதுக்கீட்டின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தை தேவைக்குட் பட்ட மாவட்டமாக கருதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேனவிடம் பூநகரி பிரதேச சபைகளின் சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை மனுவொன்றை கையளித்துள்ளனர்.

நேற்று கிளிநொச்சிக்கு விஜயமாகிய ஜனாதிபதியிடம் சுயேச்சைக் குழு வின் 19 உறுப்பினர்களும் மனுவில் கையெழுத்திட்டு ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனா். 

அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, கிளிநொச்சி மாவட் டம் யுத்த பாதிப்புக்களை அதிக சுமந்த மாவட்டத்தில் ஒன்றாகும். இங்கு மீள் குடியேற்றத்திற்குப் பின் அரசின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களும் முன் னெடுக்கப்பட்டுள்ளன. 

ஆனாலும் எமது மாவட்டத்தின் தேவையினை வருடாந்த வரவு -செலவு திட்ட நிதியொதுக்கீடு மூலம் பூர்த்தி செய்துகொள்ள முடியாதுள்ளது. எனவே தான் நாம் தங்களிடம் வேண்டிக்கொள்வது கிளிநொச்சி மாவட்டத்தினை விசேட தேவைக்கு உட்பட்ட மாவட்டமாக கருதி, விசேட நிதியொதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள் ளது. .