Breaking News

சூளுரைக்கும் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா!

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சி யிடம் உதவி கோரவில்லையென  எம்.ஏ.சுமந்திரனும், மாவை சேனாதிராஜாவும் சொல்வது பொய் எனவும், பொது மேடையில் முகத் திற்கு முன்னால் அவர்கள் இருவரும் ஈ.பி.டி.பியிடம் உதவி கோரவில்லையெனக் கூற என்று சொல்ல மாட்டார்கள் எனவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

 யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள ஈ.பி.டி.பியின் கட்சி அலுவலகத்தில் நேற்று (16.06.20180 சனிக்கிழமை மாலை ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற் றது. இதில் கலந்து கொண்ட ஊடவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள் விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 மேலும் தெரிவிக்கையில்....

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப் பிற்கு ஈ.பி.டி.பி ஆதரவு வழங்கியதற்காக பேச்சுவார்த்தை நடாத்தவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், மாவை சேனாதிராஜா சொல்வது உண்மைக்கு புறம்பான விடய மாகும்.

அவர்கள் எங்களுடன் பேசியதற்கான ஆதரங்கள் ஒரு புறம் இருக்கையில், இருவரும் பொது மேடை ஒன்றில், எனது முகத்திற்கு முன்பாக வந்து சொல்ல மாட்டார்கள் தாங்கள் ஈ.பி.டி.பியுடன் பேசவில்லை என்று. இப் பேச்சு வார் த்தை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா மட்டுமே உண்மையை உரைத்துள்ளாா்.

அதாவது இது தொடர்பில் பேசுவதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள என்னு டைய அறைக்கு தான் உட்பட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் வந்தது என்று உண்மையை வெளியில் உரைத்துள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.