Breaking News

இது மட்டும் நடந்தால் நானே அடுத்த வடக்கு முதல்வர்; டக்ளஸ் அதிரடி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரு அணியாக பிரிந்து நின்று வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளுமாக இருந்தால் நானே அடுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித் துள்ளார். 

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள ஈ.பி.டி.பி கட்சியின் அலுவல கத்தில் நேற்று (16.06.2018) சனிக் கிழமை மாலை ஊடகவியலாளர் சந் திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்க ளினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

 மேலும் தெரிவிக்கையில்:- 

தமிழ் மக்களின் நலனுக்காக வடக்கு மாகாண சபை தேர்தலில் நான் போட் டியிட வேண்டியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியில் உள்ள வட க்கு மாகாண சபையினால் தமிழ் மக்களுக்கு தேவையான எதையும் செய்து கொடுக்க முடியவில்லை. இதனால் நான் அடுத்த மாகாண சபை தேர்தலின் போது வீணை சின்னத்தில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள் ளேன். 

அடுத்த வடக்கு மாகாண அரசு ஈ.பி.டி.பியின் ஆட்சியின் கீழ் வந்தால் 3 தொட க்கம் 4 வருடங்களுக்குள் வடக்கில் தேனும் பாலும் ஓடும். இதனால் தமிழ் மக் கள் ஈ.பி.டி.பிக்கு ஆதரவினை அடுத்த வடக்கு மாகாண சபை தேர்தலில் வழ ங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளாா். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரு அணியாக பிரிந்து நின்று வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளுமாக இருந்தால் நானே அடுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடத் தில் தெரிவித்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா குறித்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.