ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் முரண்படுகள் இல்லை என்கிறாா் - துமிந்த
தேசிய அரசாங்கத்தில் பிரதான இரண்டு கட்சிகளுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் உள்ளன. ஆனால் அவற்றை பேச்சுவார்த்தைகள் மூலமாக வெற்றிகொண்டு தேசிய அரசாங்கத்தை பலப்படுத்தவே முயற்சித்துள்ளோம்.
தேசிய அரசாங்கத்தில் ஜனாதிபதிக் கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் இல்லைaயென ஸ்ரீலங்கா சுத ந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக தெரிவித்துள்ளாா்.
தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீல ங்கா சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டுமென தொடர்ச்சியாக கட்சியின் 16 பேர் கொண்ட சுயாதீன அணியினர் தெரிவித்து வருகின்ற நிலையில் அது குறித்து வினவிய இவ்வாறு தெரி வித்துள்ளாா்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பிரதான பிரச்சினைகளை வெற்றி கொள்வதில் இன்று எமக்கு பாரிய சவால்கள் உள்ளன. பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்தே இந்த சவால்களை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது.
எனினும் தேசிய அரசாங்கத்தில் குழப்பங்கள் உள்ளதாக கூறும் கதைகள் அனைத்துமே பொய்யானவையாகும். பிரதமரும் ஜனாதிபதியும் முரண்படுவதாக கூறி மக்களை சிலர் குழப்பி வருகின்றனர்.
எமது அணியிலும் சிலர் அவ்வாறான தவறான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். எனினும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்த முர ண்பாடுகளும் இல்லை. கருத்து கூறுவதன் மூலமாக சில தவறுகளை சுட்டிக்காட்டுவதை ஜனாதிபதி பிரதமருடன் முரண்படுகின்றார் என்ற அர்த்தம் கொள் ளத்தேவையில்லை.
தொடர்ந்தும் தேசிய அரசாங்கமாக பயணிக்க இருவருமே தயாராக உள்ளனர். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கொள்கை ரீதியிலான பிரச்சினைகள் இருக்கலாம்.
ஆனால் அவற்றை பேச்சுவார்த்தைகள் மூலமாக வெற்றிகொள்ள முடியும், அதேபோல் எமது கட்சியில் உள்ள முரண்பாடுகளையும் வெற்றிகொள்ள முடி யும். உடனடியாக தேசிய அரசாங்கத்தை கலைக்க முடியாது.
ஜனாதிபதி ஒரு கட்சியில் இருக்கையில் நாம் கட்சியை விட்டு வெளியேறி இறுதியில் ஜனாதிபதியை நெருக்கடியில் தள்ள முடியாது. ஆகவே புரிந்துணர்வு அடிப்படையில் பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.
தேசிய அரசாங்கத்தில் ஜனாதிபதிக் கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் இல்லைaயென ஸ்ரீலங்கா சுத ந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக தெரிவித்துள்ளாா்.
தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீல ங்கா சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டுமென தொடர்ச்சியாக கட்சியின் 16 பேர் கொண்ட சுயாதீன அணியினர் தெரிவித்து வருகின்ற நிலையில் அது குறித்து வினவிய இவ்வாறு தெரி வித்துள்ளாா்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பிரதான பிரச்சினைகளை வெற்றி கொள்வதில் இன்று எமக்கு பாரிய சவால்கள் உள்ளன. பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்தே இந்த சவால்களை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது.
எனினும் தேசிய அரசாங்கத்தில் குழப்பங்கள் உள்ளதாக கூறும் கதைகள் அனைத்துமே பொய்யானவையாகும். பிரதமரும் ஜனாதிபதியும் முரண்படுவதாக கூறி மக்களை சிலர் குழப்பி வருகின்றனர்.
எமது அணியிலும் சிலர் அவ்வாறான தவறான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். எனினும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்த முர ண்பாடுகளும் இல்லை. கருத்து கூறுவதன் மூலமாக சில தவறுகளை சுட்டிக்காட்டுவதை ஜனாதிபதி பிரதமருடன் முரண்படுகின்றார் என்ற அர்த்தம் கொள் ளத்தேவையில்லை.
தொடர்ந்தும் தேசிய அரசாங்கமாக பயணிக்க இருவருமே தயாராக உள்ளனர். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கொள்கை ரீதியிலான பிரச்சினைகள் இருக்கலாம்.
ஆனால் அவற்றை பேச்சுவார்த்தைகள் மூலமாக வெற்றிகொள்ள முடியும், அதேபோல் எமது கட்சியில் உள்ள முரண்பாடுகளையும் வெற்றிகொள்ள முடி யும். உடனடியாக தேசிய அரசாங்கத்தை கலைக்க முடியாது.
ஜனாதிபதி ஒரு கட்சியில் இருக்கையில் நாம் கட்சியை விட்டு வெளியேறி இறுதியில் ஜனாதிபதியை நெருக்கடியில் தள்ள முடியாது. ஆகவே புரிந்துணர்வு அடிப்படையில் பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.