வியூகம் அமைக்க ஆரம்பித்த விக்னேஸ்வரன்.!
இந்நிலையில் விக்னேஸ்வரன் அவ்வாறு தனியாக பிரிந்து செல்ல இடமளிக்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியன கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனிடம் எடுத்துக் கூறியுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாண சபை களுக்கான தேர்தல் இவ்வருட இறுதிக்குள் நடத்தப்படும் என பகிரங்கமாக அறிவித்துள்ள நிலை யில் தற்போது அரசியல் கட்சிகள் அது குறித்த வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளன.
அதன் பிரகாரம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அடுத்த தேர்தலில் தான் போட்டியிடுவேன் என்பதை மட்டுமே அறிவித்துள்ள போதும் கூட் டமைப்பிலா அல்லது தனித்தா என்பது குறித்து தெளிவாக எதனையும் கூறமுடியாது. தொடர்ச்சியாக மௌனம் காத்து வருகின்றார்.
எனினும் அண்மைய நாட்களில் தனிக் கட்சியொன்றை ஆரம்பிப்பது தொடர் பில் சில நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.