Breaking News

விரைவில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என - சம்பந்தன்

கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் விரைவில் தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித் துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று நடை பெற்ற தமிரசுக் கட்சியின் மத்திய செயற் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரை யாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள் ளாா். 

இச் செயற்குழு கூட்டத்தில் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் கலந்துகொண்டு தொடர்ந்தும் உரையாற்றிய சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில், கேப்பாபுலவு மக்களின் காணிவிடயம் சம்மந்தமாக தமிழ ரசுக் கட்சியின் முயற்சி நீண்டகாலமாக தொடர்ந்துள்ளது. 

அண்மையில் 136 ஏக்கர் காணி விடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவும் மேலும் பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்னும் 73 ஏக்கர் விடு பட வேண்டும். இந்த காணிவிடுவிப்பு சம்பந்தமாக நாங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். 

இது குறித்த கடந்த வியாழக்கிழமை நான் ஜனாதிபதியினை சந்தித்து காணி விடுவிப்பு குறித்து கலந்துரையாடி கடிதம் ஒன்றிணையும் கையளித்தேன். எனவே கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் விரைவில் தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளாா்.