ஐம்பதுக்கு ஐம்பதா? அல்லது அறுபதுக்கு நாற்பதா? - பாராளுமன்றமே தீா்மானிக்கும்.!
புதிய கலப்பு முறையின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை ஐம்பதுக்கு ஐம்பது வீதம் நடத்துவதா? அல்லது அறுபதுக்கு நாற்பது வீதம் நடத்து வதா? என்பதனை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டுமென தேர்தல் கள் ஆணை க்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெனியாய தேசிய பாடசாலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.
மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் தேர்தல்கள் தாமதமாகின்றன. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தாவிடின் நாட்டிலும் அரச நிறுவனங்களிலும் பல குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே தேர்தல் உடன் நடத்த வேண்டும்.
இல்லையேல் ஜனநாயகத்திற்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
இத னால் ஜனநாயகமும் அபிவிருத்தியும் அதள பாதாளத்திற்கு தள்ளப்பட்டு விடும். சாதாரண சங்கம் என்றாலும் இடைக்கிடையே தேர்தல் நடத்தப்பட்டு புதியவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
அதேபோன்றே மாகாண சபைகளுக்கு உரிய நேரத்தில் புதியவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.
மாகாண சபைக்கு புதிய தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தற்போதைக்கு ஐம்பது வீதம் விகிதாசார முறைமையில் இருந்தும் ஐம்பது வீதம் தொகுதி வாரி முறைமையில் இருந்தும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே புதிய முறைமையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எனினும் அதனை விட 60 வீதம் தொகுதி வாரியாகவும் 40 வீதம் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும் என பலர் கோருகின்றனர்.
இந்நிலையில் தற்போது எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் உள்ள நிலையில் அதனை பாராளுமன்றம் நிறைவேற்றி தந்தால் மாத்திரமே எனக்கு தேர் தலை நடத்த முடியும்.
ஐம்பதுக்கு ஐம்பதா அல்லது அறுபதுக்கு நாற்பதா என்ற தீர்மானத்தை பாராளுமன்றமே எடுக்க வேண்டும். அதுமாத்திரமின்றி தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதனாலும் அதனையும் பாராளுமன்றமே தீர்மானிக்க வேண் டும்.
இதற்கு அப்பால் பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதாக இருந் தால் அதனையும் பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டுமெனத் தெரிவித்துள் ளாா்.








