Breaking News

120 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு.!

யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி மாவட்­டங்­க ளில் படை­யினர் வசம் இருந்த 120 ஏக்கர் காணிகள் பொது மக்­க­ளிடம் நேற்று மீள வும் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. விடு­விக்­கப்­பட்ட காணி­களில் மக்கள் மீளக் குடி­யேற முடியுமெனக் மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வி த்­துள்ளார்.

யாழ்ப்­பாணம் தெல்­லிப்­பழை பிர­தேச செய­லாளர் பிரிவில் 62.95 ஏக்­கரும் கிளி­நொச்சி மாவட்டம் கரைச்சி பிரே­தச செய­லாளர் பிரிவில் 5.94 ஏக்­கரும் முல்­லைத்­தீவு மாவட்டம் கரைத்­து­ரை­பற்று பிர­தேச செய­லாளர் பிரிவில் 52 ஏக்கர் காணி­க­ளுமே நேற்று விடு­விக்­கப்­பட்­டுள்­ளன.

 நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது பொது மக்­க­ளினம் காணி­களை படிப்­ப­டி­யாக விடு­விக்கு வரு­கின்­றது. அதன் ஒரு கட்­ட­மா­கவே நேற்று இக் காணி­களும் விடு விக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.