Breaking News

பாலியல் சேட்டை செய்த வைத்தியரை கைது செய்ய நடவடிக்கை.!

வவுனியா நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் தனக்கு பாலியல் தொந்தரவு இடம்பெற்றதாக நேற்று இரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டினையடுத்து அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனா்.

 மேலும் தெரிய வருகையில்,

வவுனியா நகரில் அமைந்துள்ள தனி யார் வைத்தியசாலையில் பணிபுரி யும் பெண்ணொருவர் நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த தனியார் வைத் தியசாலைக்கு தினசரி நோயாளி களின் வைத்திய அறிக்கைகளை கொண்டு சென்று வழங்குவது வழமை.

அதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை வைத்திய அறிக்கைகளை எடுத்துச் சென்ற குறித்த பெண்ணை அவ் வைத்தியசாலையின் வைத்தியர் பாலியல் ரீதியான தொந்தரவு செய்துள்ளார். அதனையடுத்து குறித்த பெண் அங்கிருத்து தப்பித்து வீட்டிற்குச் சென்றுள்ளார்.

ஆனாலும் பயத்தில் இவ்விடயத்தினை வீட்டாருக்கு தெரிவிக்கவில்லை. பின் னர் குறித்த தனியார் வைத்தியசாலையின் வைத்தியர் அப் பெண்ணிற்கு குறுந் தகவல் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

அதையடுத்து நேற்று குறித்த பெண் சம்பவத்தினை பெற்றோருக்கு தெரியப் படுத்தியதையடுத்து இரவு 10.00 மணியளவில் பெற்றோர் அப்பெண்ணை அழைத்துச் சென்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள் ளனா்.

பாலியல் தொந்தரவுக்குள்ளாகிய பெண் வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வைத்தியரை கைது செய்வ தற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனா்.

குறித்த வைத்தியர் மீது முன்னரும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.