Breaking News

20ஆவது திருத்தச் சட்­டத்தை இன்னும் பார்க்­க­வில்லை என்கிறாா் - ஜனா­தி­பதி

மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் நான் தலை­யிட்­டதன் கார­ண­மா­கவே இன்று எனக்கு இந்த பிரச்­சி­னை­களும் நெருக்­க­டி­களும் ஏற்­பட்­டுள்­ளன. அது தொடர்பில் நான் நட­வ­டிக்கை எடுத்தமையே இன்று எனக்கு ஏற்பட்டுள்ள நெருக்­க­டி­க­ளுக்கு காரணம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித் துள்ளாா். 

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அண்­மை யில் சில ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்­த­போதே ஜனா­தி­பதி இதனை குறி ப்­பிட்டார். அவர் அதன்­போது மேலும் குறிப்­பி­டு­கையில், எனக்கு இன்று ஏற்­பட்­டுள்ள அனைத்து பிரச்­சி­னை­க­ளு க்கும் காரணம் நான் மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் கை வைத்­ததே ஆகும். 

அத­னால் தான் இன்று அனைத்து குழப்­பங்­களும் ஏற்­பட்­டுள்­ளன. இதே­வேளை மக்கள் விடு­தலை முன்­னணி முன்­வைத்­துள்ள 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் வினா­வி­ய­போது அதனை தான் இன்னும் காண­வில்­லை­யென்றும் அது தொடர்பில் தான் சில விட­யங்­களை கேள்­விப்­பட்­ட­தா­கவும் தெரிவித்துள்ளாா். 

20ஆவது திருத்தச் சட்­டத்தின் வரைபை நான் இன்னும் பார்க்­க­வே­யில்லை. எனவே அது தொடர்பில் எதுவும் கூற முடி­யாது என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார். இவ்­வா­றி­ருக்க சுதந்­திரக் கட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றுமா என்ற கேள்­விக்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி ஊழலற்ற புதிய கூட்டணி ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக கூறினார். அதனை நான் தற்போது உருவாக்கி வருவதாகத் தெரிவித்துள்ளாா்.