Breaking News

உள்நாட்டு கைத்தொழிற்துறையினரைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை.!

உள்நாட்டு கைத்தொழிற்துறையினரைப் பாதுகாத்து நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துதல் அரசின் கொள்கையாகும் என்பதால் அதற் கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு தேசிய பொருளாதார சபை க்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். 

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவ தற்கான தீர்மானங்களை மேற்கொள்வதற் காக அமைக்கப்பட்ட தேசிய பொருளாதார சபை 12ஆவது முறையாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத் தில் ஒன்று கூடியபோதே ஜனாதிபதி மேற் கண்டவாறு தெரிவித்துள்ளாா். 

உள்நாட்டு கைத்தொழிற்துறையினர் முகங்கொடுத்திருக்கும் 06 பிரதான பிரச் சினைகள் தொடர்பாக இங்கு ஆலோசிக்கப்பட்டதுடன், பொருளாதார முகா மைத்துவத்தில் மேற்கொள்ள வேண்டிய நாட்டிற்கு தேவையான துரித மாற் றங்கள் மற்றும் குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால செயற் திட்டங் கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.  

இறக்குமதி செய்யப்படும் செரமிக் சுகாதார உபகரணங்களுக்கு விதிக்கப்பட் டிருந்த செஸ் வரியை நீக்கியமையால் அப்பொருட்களின் விலையுடன் உள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு போட்டியிட முடியாமையால் அத்துறையில் ஏற்படக்கூடிய வீழ்ச்சியை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளது.

அதற்கமைய முன்பிருந்த செஸ் வரிக்கு இணையான சுங்க இறக்குமதி வரியை விதிப்பதற்கான வாய்ப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டது. உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் வங்கி கடன்களை பெற் றுக்கொள்ள முடியாமையினால் அவர்களது தொழிலை முன்னெடுத்து செல் வதில் ஏற்பட்டிருக்கும் அசௌகரியங்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 

உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங் கும் பொறுப்பு அனைத்து அரச வங்கிகளுக்கும் இருப்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அதிக இலாபம் பெறுவதை மாத்திரம் கருத்திற் கொள் ளாது தேசிய உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலமாக நாட்டின் அபி விருத்தி செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்க அரச வங்கிகள் கவனம் செலு த்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா். 

அதற்கமைய பிரதேச அபிவிருத்தி வங்கிகள் உள்நாட்டு கைத்தொழிலாளர் களுக்கும் கிராமிய பொருளாதாரத்திற்கும் கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டதுடன், பிரதேச அபிவிருத்தி வங்கியின் முதலீ ட்டினை வலுப்படுத்துவதன் ஊடாக மேற்குறிப்பிட்ட பணிகளை நிறைவேற் றிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டுமென்பதே தேசிய பொருளாதார சபையின் முடிவாக முன்வைக்கப்பட்டது. 

போக்குவரத்து சேவையின் செயற்திறனை அதிகரிப்பதற்காக செயற்படுத்த எண்ணியிருக்கும் “சஹசர” செயற்திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பாக கலந்துரையாடியதுடன், பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமை ச்சு மற்றும் போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஒத்துழைப் புடன் அச்செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக தீர்மானிக்கப்பட் டுள்ளது. 

சுகாதார சேவைகளான மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவமனை கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வெட் வரியை நீக்குதல் தொடர்பாக கலந்துரையாடியதுடன், விரைவில் அது தொடர்பான மேலுமொரு கலந்துரை யாடலை மேற்கொண்டு தீர்வு காணவும் முடிவெடுக்கப்பட்டது. 

தேசிய பொருளாதார சபையால் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேசிய பொருளா தார செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக் குவதற்கு அரச தரப்பு, பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவுப்படுத்தும் கருத் தரங்கு இம்மாதம் 28ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் நடத்து வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லலித் சமரக்கோன் தெரிவித்துள்ளாா்.  

அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்தன, மலிக் சமரவிக்ரம, மஹிந்த சமரசிங்க, மஹிந்த அமரவீர, அர்ஜூன ரணதுங்க, ரிஷாட் பதியுதீன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, கபிர் ஹசிம், சரத் அமுனுகம, தயா கமகே, பிரதி அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, அசோக்க அபேசிங்க, நிதி அமைச் சின் செயலாளர் பேராசிரியர் எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் பேரா சிரியர் இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்ட நிர்வாக குழுவினர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனா்.