Breaking News

யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க அமைச்சர்கள் எதிர்ப்பு.!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள்’ சிலர் கடும் எதிர்ப்பாகியுள்ளனா். 

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காணாமல் போனவர்களின் உறவினர் களுக்கும் நட்டஈடு வழங்குவதற்கான பிரேரணையொன்று அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டபோதே இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.  

 சிறிலங்கா அரசினால் நாட்டுக்குள் நிலைமாறு நீதியை நிலைநாட்டுவதற்காக முன்மொழியப்பட்ட பரிந்துரையாக போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்கான பிரேரணையொன்றை அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அமைச் சரவையின் அனுமதிக்கு இந்த யோசனையை சமர்ப்பித்த போது, பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவொன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இந்த பிரேர ணையின் மூலம் நிவாரணம் வழங்கப்படக் கூடாது என்று கடும் திர்ப்பை பதிவு செய்திருப்பதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 2015 செப்டெம்பர் மாதம் சிறிலங்கா அரசின் இணை அணுசரணையுடன் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, 

கொண்டுவரப்பட்ட போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காணாமல் போன வர்களின் உறவினர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர்கள் தெரிவித்துள்ளாா்.