Breaking News

கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் கட்டிட வெடிப்பிற்கான காரணம் என்ன.! சி.வி.

திறந்து வைக்கப்பட்ட கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டட கட்டுமான பணிகளின் தரத்தினை விசாரணை செய்து அறிக்கை சமர்ப் பிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மாகாண சமூக சேவைகள் பணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை தவநாதன் ஆகியோரின் இரு பது இலட்சம் ரூபா நிதியிலும் மாகாண சபை உறுப்பினர் அரியரத்தினம் அவர்களின் இரண்டு இலட்சம் ரூபாவுமாக 42 இலட்சம் ரூபாவுக்கு அமைக்கப்பட்ட புதிய கட்டத்தின் பல பகுதிக ளில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதோடு 42 இலட் சம் ரூபா பெறுமதியில் கட்டடம் அமைக்கப் பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள் ளது.

மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை மற்றும் மாற்று வலுவுள் ளோர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந் ததனை அடுத்து முதலமைச்சர் மேற்படி பணிப்புரையை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் முதலமைச்சர் நேற்றைய (12) தினம் நிகழ்வில் வைத்து கருத்து தெரிவித்த போது வெளிச்சுவர் நீள வெடிப்புக்கள் கட்டிய 56 மாதங் களில் இத்தனை வெடிப்புக்கள் வருவதற்கான காரணம் என்ன?

எமது அமைச்சின் செயலாளர் விரைவில் பொறியியலாளர்களைக் கொண்டு இதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகளை முன்னெ டுப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

 மேற்படி ஓப்பந்த பணிகளை கட்டடங்கள் திணைக்களம் தனியார் ஒருவருக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.