குற்றச் செயல்கள் தடுக்கப்படுமென்ற 24மணி நேரத்திற்குள் கொடிகாமத்தில் வாள் வெட்டு!
யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் தங்கியுள்ளபோது யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் றஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி அமைச்சர் நளின் பண் டார, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெய சுந்தர ஆகியோர் நேற்று சட்டம் ஒழுங்கு தொடா்பாக கலந்துரையாடி யுள்ளனா்.
அவர்கள் இன்றும் யாழ்.மாவட்டத்திலேயே தங்கியிருக்கும் நிலையில் யாழ். கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் வாள்வெட்டுச் சம்ப வம் நடைபெற்றுள்ளது.
கொடிகாமம் - கச்சாய் வீதியில் வீ.சி. சிறுவிதியிலுள்ள வீடொன்றுக்குள் வாள் களுடன் புகுந்த குழு ஒன்று வீட்டை அடித்து சேதப்படுத்தியதுடன் வீட் டுக்குள் புகுந்து 5 பிள்ளைகளின் தந்தையான சிவராசா சசிக்குமார் (வயது 44) என்பவர் மீது சரமாரியாக வாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளனா்.
படுகாயமடைந்த சசிக்குமார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு உட னடியாகவே முறைப்பாடு கொடுக்கப்பட்டபோதும் இன்று காலை 9 மணிவரை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சமூகமளிக்கவில்லையென மக்களால் தெரி விக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தெரிவித்திருந்தும் 24மணி நேரத்திற்குள் வாள் வெட்டுத் தாக்குதல் நடைபெற்றமை பெரும் அதிா்ச்சியாகவே உள்ளது.