Breaking News

சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக மரண தண்டனை - அனந்தி.!

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடா்பான விடயங்களுக்கு மரண தண் டனை அமுல்படுத்த வேண்டுமென வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளாா். 

 மேலும் தெரிவிக்கையில், 

போதைப்பொருள் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு குற்றவாளி களுக்கு எதிராக மரணதண்டனை வழங்குவதாக  அரசாங்கம் தீர்மானித் துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான கையொப்பம் இடுவதற்கு தயாராகி விட்டதாகவும், அமைச்ச ரவை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை நாம் வரவேற்கின்றோம். யுத்தத்திற்கு பின்னரான நிலைமையில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள தோடு கடத்தல்களும், வர்த்தகங்களும் நிறைந்துள்ளன. 

இதற்கான சூத்திரதாரிகள் தற்போது வரை இனங்காணப்படாதவர்களாக நட மாடுகின்றாா்கள். ஒன்றரை இலட்சம் இராணுவம் வடக்கில் தங்கியுள்ள நிலை யில் போதைப்பொருளுடன் தொடர்புடைய தாராளமான செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றமை எமக்கு பாரிய சந்தேகத்தினை தீண்டியுள்ளது. 

ஆகவே அது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டியது அவசிய மாகின்றது. இதேவேளை போதைப்பொருள் செயற்பாடுகளை கட்டுப்படுத்து வதற்கான மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக் கப்பட்டது போன்று சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இத்தகைய கடுமையான சட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது.

வடக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் சிறுவர் பாலியல் வன்புனர்வுச் செயற்பாடுகள் யுத்தத்தின் பின்னரான காலத்தில் அதிகரித்துள்ளன. அதிலும் வித்தியா, ரெஜினா போன்ற சிறுமியர்களின் மரணம் வடக்கினை மட்டுமல்ல உலகத்தையே உலுக்கியுள்ளது. 

இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது தடுப்பதற்கு சட்டங் கள் கடுமையானவையாக இருப்பதோடு அவற்றினை பராபட்சமின்றி நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் எனது கோரிக்கையாக இருக்கின்றது. மேலும் நீதி அமைச்சரும் ஒரு பெண்ணாக இருப்பதால் இவ் விடயத்தினை அவர் நன்கு புரிந்து கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.