Breaking News

மெய்ப்பாதுகாவலரை நினைவு கூர்ந்தாா் இளஞ்செழியன்.!

 உப பொலிஸ் பரிசோதகர் ஹேமாவகே சரத் ஹேமச்சந்திரவின் முதலாம் ஆண்டு் நினைவு நாளை நேற்றைய தினம் அவரது நினைவிடத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அஞ்சலித்துள்ளாா். 

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழிய னின் மெய்ப்பாது காவலர் சார்ஜன்ட் ஹேமச்சந்திர, கடந்த ஆண்டு ஜூலை 22ஆம் திகதி யாழில் சுட்டுக் கொல்லப்பட்டார். நீதிபதியின் காருக்கு பாதுகாப்பாகச் சென்ற போது, வழிமறித்த ஒருவர், மெய்ப்பாது காவலர் ஹேமச்சந்திரவின் துப்பாக்கியைப் பறித்து அவர் மீதே துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளாா். 

நல்லூர் ஆலய சூழலில் மாலை 5 மணியளவில் இச் சம்பவம் நடைபெற்றதுடன்.  மற்றொரு மெய்ப் பாது  காவலரும் படுகாயமடைந்தார். நீதிபதி முன்னிலை யிலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

படுகாயமடைந்த மெய்ப்பாதுகாவலர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும் பின்னிரவு 11 மணியளவில் சார்ஜன்ட் ஹேமச்சந்திர சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். 

அவர் உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டார். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலராக ஹேமச்சந்திர 15 வருடமாக கடமையாற்றியவர். 

சிலாபத்தை சேர்ந்த அவருக்கு ஒரு மகளும் ஒரு ஆண் மகனும் உள்ளனர். அவர்கள் இருவரையும் நீதிபதி தத்தெடுத்திருந்தார். அவரின் முதலாம் ஆண்டு் நினைவு தினமான நேற்றைய தினம் அவரது நினைவிடத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அஞ்சலி செலுத்தியுள்ளாா். 

அத்துடன் ஹேமச்சந்திரவின் குடும்பத்தினருடன் இணைந்து அவர்களது இல் லத்தில் ஹேமச்சந்திரவின் உருவப்படத்துக்கு தீபமேற்றி நீதிபதி அஞ்சலி செலுத்தியுள்ளாா்.