Breaking News

ஆட்சி மாற்றத்தின் பின் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமாம் - நாமல்

தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் அரசியல் தீர்வு விடயத்தை நல் லாட்சி அரசாங்கத்தினாலோ அல்லது வடக்கு தமிழ் அரசியல்வாதிகளினால் பெற்றுக் கொடுக்க முடியாது.  ஆட்சி மாற்றத்தின் பின்னரே அனைத்துக்கு மான தீர்வு கிடைக்கலாமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரி வித்துள்ளாா். 

மேலும் தெரிவிக்கையில். 

வடக்கில் மக்கள் பொருளாதார ரீதி யில் பாரிய பின்னடைவினை எதிர் கொண்டு வருகின்றனர். அங்கு ஆவா குழுவினரது செயற்பாடுகள் தொடர்ந் தும் அதிகரித்தாகவே உள்ளது. இத னால் மக்கள் தினமும் அச்சத்துடன் தனது அன்றாட வாழ்க்கையினை நக ர்த்தியவாறு உள்ளனா். 

இது தொடர்பாக வட மாகாண தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் எவ்வித அக்கறை செலுத்தாமல் செயற்படுவதே இப் பிரச்சினைகளுக்கான பிரதான காரணமா கும். 

வடக்கின் நிலைமைகள் இவ்வாறிருக்கையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கிற்கு அபிவிருத்தி தேவையில்லை. அரசியல் தீர்வே வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளமையானது அவரது பொறுப்பற்ற தன்மை யினை வெளிப்படுத்துகிறது. 

வட மாகாணமானது அபிவிருத்தி ரீதியில் முன்னேற்றமடைய வேண்டிய தள மாக காணப்படுகின்றது. இருப்பினும் தேசிய அரசாங்கத்தில் இவ் விடயங்கள் ஏதும் நிறைவேற்றப்பட மாட்டாது ஆட்சி மாற்றத்தின் பின்னரே நாடு பிளவு படாத விதத்தில் அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமெனத் தெரிவித்துள் ளாா்.