மகிந்தவின் பொறியில் சிக்கினாரா விஜயகலா?
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி அவசியம் என கருத்து வெளியிடுவதற்கு காரணம் என்னவென ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜயகலா மகேஸ்வரனின் கருத்தினை கண்டிப்பதாகத் தெரி வித்துள்ளாா்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு தற் போதைய அரசாங்கம் பெரும் சேவையாற்றி யுள்ளது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற் கான அடித்தளத்தையிட்டுள்ளதாகத் தெரிவித் துள்ளார்.
வடபகுதி மக்களிற்கு அரசாங்கம் செய்த சேவைகள் குறித்து தெரிந்திருந்தால் இராஜா ங்க அமைச்சர் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்திருக்க மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் முன்னாள் போராளிகளின் உரிமைகளை உறுதிசெய்துள்ளது இதன் காரணமாக பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காது எனத் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் அரசியல் இலாபம் பெறுவதற்காக இவ்வாறான கரு த்தை வெளியிட்டாரா அல்லது நியுயோர்க் டைம்ஸ் செய்தி மூலம் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ள நெருக்கடியை திசை திருப்புவதற்காக இதனை செய் தாரா என நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.








