Breaking News

இயற்கையாக மரணிக்கவில்லையாம் ஜெயலலிதா வெளிவரும் அதிா்வுகள்.! (காணொளி)

அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் வலம் வந்த ஜெயலலிதா கடந்த 5 டிசம்பர் 2016 அன்று உடல் நலக்குறைவின் காரண மாக உயிரிழந்துள்ளாா் என அவர் சிகிச்சை பெற்றுவந்த அப்போலோ மருத் துவமனையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரம், ஜெயாவின் மரணத்தில் தங் களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக  ஜெயா மரணம் குறித்து நடுநிலையான தோர் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென பல தரப்புகள் எச்சரித்த நிலையில், தற்போதைய முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப் பாளருமான எடப்பாடி, 

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியைக் கொண்டு ஜெயாவின் மரணம் குறி த்து விசாரிக்க நீதி விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டார். ஆறுமுக சாமியின் நீதி விசாரணை கமிஷனில், ஜெயாவின் உயிர்த்தோழி சசிகலா தொடங்கி தொடர்புடையோர் அனைவரும் ஆஜராகி ஜெயா மரணம் குறித்து தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்துக்கொண்டிருக்க கூடிய சூழலில், பொதுமக்களும் - இன்னபிற தரப்புகளும் அதிரும் வண்ணம் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் கமிஷனில் கசிந்துள்ளது. 

ஆம், ஜெயா மரணம் குறித்து சசிகலா தாக்கல் செய்துள்ள பிராமண பத்திரத் தில் உள்ள தகவல்களுக்கும், அப்போலோ ஊழியர்கள் தெரிவிக்கும் கருத் துக்கும் எண்ணற்ற முரண்பாடுகள் காணப்பட்டுள்ளன.  அதே போன்று, சிசிடிவி கேமராக்கள் குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும் தக வல்களை மாறுபட்டதாகத் தெரிவித்துள்ளது. 

இதனால், அதிர்ச்சியுடன் விசாரணை கமிஷன். முன்னதாக, 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயாவை சந்திக்க அரசு உயர் அதிகாரிகள் துவங்கி யாரையும் சசி தரப்பு அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே நீடித்துள்ளது.