Breaking News

வரலாற்று இராவணன் வெட்டில் குரலெழுப்பிய - சம்பந்தன்

சரித்திர ரீதியான ஆய்வுகளின் ஊடாக எமது வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டிய தேவை இன்றைய கால கட்டத்தின் மிக முக்கியமான காரணியாக அமைவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் புகழாராம் பாடியுள்ளாா். 

என்.கே.எஸ்.திருச்செல்வம் எழுதிய 'யார் இராவணன்' என்ற நூல் வெளி யிட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளாா்.

மேலும் தெரிவிக்கையில்,

1624 ஆம் ஆண்டு போத்துக்கேயரால் திருக்கோணேஸ்வரர் ஆலயம் உடை க்கப்பட்டபோது இவ் ஆலயத்தில் ஒரு பகுதியாக இருந்த 1000 கால் மண் டபத்தை உடைத்தே தற்போதுள்ள பிரட்ரிஸ் கோட்டை உருவாக்கப்பட்டு ள்ளது. மேலும் சமுத்திரத்தின் அடியில் ஆலயத்தின் பல சிதைவுகளும் வர லாற்று உண்மைகளும் புதையுண்டு போயுள்ளது. 

எனவே இந்த ஆராய்ச்சி சட்டபூர்வமாக அமைய வேண்டும். இராவணன் இலங் காபுரியை ஆண்ட பலம் வாய்ந்த தமிழ் மன்னன் அவர் சிவபெருமானின் தீவிர பக்தனாக இருந்துள்ளார். 

அதற்கான பல ஆதாரங்கள் உள்ளது. திருக்கோணேஸ்வரத்தின் வலது புறத் தில் உள்ள இராவணன் வெட்டு அதற்கு ஒரு சான்றாகும் என்றார். இராவணன் இலங்கையில் பல சிவாலயங்களை கட்டியது மட்டுமல்லாது இந்தியா இந் தோனேசியா போன்ற நாடுகளிலும் சிவாலயங்களை அமைத்துள்ளார். இந் தியா மற்றும் ஏனைய பல நாடுகளில் அவரை கடவுளாக வழிபடுவது வழக் கம்.

இராவணன் ஆயுள்வேத வைத்தியத்திலும் கை தேர்ந்தவர் என்றும் வரலாறு கூறப்படுகின்றது. இராமாயணத்தில் ராமன் பற்றி அதிகமாக கூறப்பட்ட போதும் இராவணன் பற்றிய தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை. 

அக் குறையை போக்க யார் இந்த இராவணன் என்ற நூல்வெளி வந்துள்ளது என்று நான் கருதுகின்றேன். எனவே சரித்திர ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளியிட வேண்டியது அவசியம்.

இவ்வாறான ஒரு சரித்திர ரீதியான ஆய்வு நூலை வெளிட்ட நூலாசிரியர் என.கே.எஸ். திருச்செல்வத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா்.