Breaking News

முல்லைத்தீவில் தமிழர்களின் மீன் வாடிகள், படகுகள், இயந்திரங்கள் தீக்கிரை.!

முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் தமிழர்களின் மீன் வாடிகள், படகுகள், இயந்திரங்கள் யாவற்றையும் தீயினால் எரிக்கப்பட்டதுடன் அப் பகுதியில் பதற்ற நிலை நிலவியுள்ளது. 

இனம் தெரியாதோரால் திட்டமிட்டு வைத்த தீயினால் 8 வாடிகள், 3 படகு கள், 2 இயந்திரம் 27 வலைகள் என்பன முற்றாக தீயில் எரிந்து சாம்பலாகி யுள்ளன. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆபத் தான சுருக்குவலையினை மின் ஒளி பாய்ச்சி மீன்பிடிக்கு பயன்படுத் துவதனை தடை செய்ய வேண்டும் எனக் கோரி உள்ளூர் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டம் நடாத்தியுள்ளனா். 

இதனையடுத்து 12 ஆம் திகதி மாலையில் கடற்றொழில் அமைச்சர் நேரில் வருகை தந்து அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கி அதுவரை குறித்த முறையினை தடை செய்ய உத்தரவிட்டார். 

இந்த நிலையில் திங்கட் கிழமை மாலை 6 மணியளவில் தென்னிலங்கை மீனவர்கள் இதே தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களை கடலிற்கு கொண்டு செல்ல முயன்ற சமயம் தமிழ் மீனவர்கள் தடுத்து நிறுத்தப்பட் டுள்ளனா். 

இந் நிலையிலேயே இரவு 11 மணியளவில் தமிழ் மீனவர்களின் வாடிகள், பட குகள், இயந்திரங்கள், வலைகள் என அனைத்தும் தீ வைத்து கொளுத்தப் பட்டுள்ளது. இதனால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டதோடு குறித்த பிர தேசத்தில் பதற்ற நிலை நிலவியுள்ளது.