Breaking News

அமெரிக்காவிற்கு பயணமாம் பசில், கோத்தபாய !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச இன்று அதிகாலை 3.15 மணியளவில் கட்டு நாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு பயணமாகியுள்ளாா்.

இந் நிலையில், அவர் மூன்று நான்கு மாதங்களுக்கு திரும்பி வரப்போவ தில்லையென கட்சியின் தலைவர்க ளுக்கு தெரிவித்துள்ளதுடன் ஜனாதி பதி வேட்பாளர் தொடர்பாக ஏற்பட் டுள்ள சர்ச்சை காரணமாகவே பசில், நீண்ட நாட்களுக்கு அமெரிக்காவில் தங்குவதாக தீா்மானித்துள்ளாா்.

அதேவேளை வியத்கம அமைப்பில் அங்கம் வகிக்கும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிலரின் கடுமையான விமர்சனங்கள் காரணமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காது என் பதை உணர்ந்துள்ளதால், கடும் அதிருப்தியில் இருந்து வரும் கோத்தபாய, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பாக இதுவரை தீர்மானம் எதனையும் எடுக்கவில்லையென கோத்தபாய தரப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளாா்.