எல்லை நிர்ணய அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதாக - மாவை
வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியிலும் வாழும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை அழிக்கவே முயற்சிக்கள் இடம்பெறுகின்றன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா எம்.பி தெரிவித்துள்ளாா்.
தமிழ், முஸ்லிம் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட சகல கோரிக்கைக ளையும் நிராகரித்தே எல்லை நிர்ணய அறிக்கையை தயாரித்துள்ளனர்.
தமிழ், முஸ்லிம் மக்களை முழுமை யாக நிராகரித்து பெரும்பான்மையின் வெற்றிக்காக சிறுபான்மை இனத்த வர் பாடுபடும் தேர்தல் எல்லை முறைமையையே அரசாங்கம் அமைத்துள்ளது.
வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியிலும் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஜன நாயக உரிமைகளை அழிக்கவே முயற்சிக்கின்றனர்.
நாம் வடக்கு கிழக்கின் தமிழ் பேசும் மக்களின் நலன்களையும் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நலன்களிற்காக முயற்சிக்கின்றோம்.
அதற்கமையவே நாம் எமது ஆலோசனைகளை முன்வைத்தோம். எனினும் எமது கருத்துக்கள் எவையும் கவனத்தில் கொள்ளப்படாது. சிறுபான்மை மக்க ளின் நிலைமைகளை கருத்தில் கொள்ளாது, எம்மை புறக்கணிக்கும் வகை யில் இப்போது எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய எல்லை நிர்ணய அறிக்கை மூலமாக சிறுபான்மை மக்களுக்கு எந்த நன் மைகளும் இல்லை, இது பெரும்பான்மை மக்களின் நலன்களை, விருப்பங் களை மாத்திரம் கருத்தில் எடுத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை, மலையக தமிழ் மக்களை, முஸ் லிம் மக்களை முழுமையாக நிராகரித்து அனைவரும் சிங்கள பெரும்பான் மையினரின் வெற்றிக்காக செயற்பட வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது.
இந் நாட்டில் தமிழ் மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர். சிறுபான்மை இனத்தவர் பல சந்தர்ப்பங்களில் அடக்கு முறைக்கு அமர்த்தப்பட்டுள்ளனா்.
இன்று சர்வதேசம் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை கொண்டுவந்து மனித உரிமைகள் பேரவையில் பேசுகின்றது என்றால் அதற்கு இந் நாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அழிவுகளே காரணமாகும்.
அவ்வாறான நிலையில் மேலும் மேலும் சிறுபான்மை மக்களை அடக்கும் நடைமுறையாகவே இதனையும் நாம் பார்க்கின்றோம்.
ஆகவே இப்போது கொண்டு வரப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கையை வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்காகவும், மலையகத்தின் தமிழ் பேசும் மக்களுக்காகவும், முஸ்லிம் மக்களுக்காகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிா்த்துள்ளது.
வாக்கெடுப்பை நடத்தினால் அதனை எதிர்த்தே நாம் வாக்களிப்போம். அதே போல் மாகாணசபை தேர்தல் முறைமைக்கான புதிய எல்லை நிர்ணய அறி க்கையை தயாரித்து அதில் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதி நிதித்துவத்தை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாகாணசபை தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிக்கும் குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் இவ் வாறு தெரிவித்துள்ளாா்.








