Breaking News

மலிக்கை பதில் பிர­தமர் என அழைத்த ஜனா­தி­பதி.!

அமைச்சர் மலிக் சம­ர­விக்­ர­மவை பார்த்து பதில் பிர­தமர் வரு­வதாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நகைச்­சு­வை­யாக தெரிவித்துள்ளார். 

இச் சம்­பவம் நேற்று முற்­பகல் நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டம்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அமைச்­ச­ரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. 

அமைச்­சர்கள் சமுக­ம­ளித்­தி­ருந்த நிலையில் ஜனா­தி­பதி கூட்டம் நடை­பெற்ற சபைக்கு வருகை தந்தார். அவ­ருக்கு பின்னால் அமைச்­சர் மலிக்­ ச­ம­ர­விக்­ரமவும் வருகை தந்­த­போது அவரைப் பார்த்தே பதில் பிர­தமர் வரு­வதாக ஜனா­தி­பதி தெரிவித்துள்ளார். 

ஜனா­தி­ப­தியின் கூற்றையடுத்து அமைச்­சர்கள் நகைச்­சு­வை­யாக சிரித்­துள்­ள னர். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வியட்நாமுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்­ள­மையால் நேற்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பங்­கேற்­க­வில்லை. 

அமைச்­சர்­க­ளான அகிலவிராஜ் ­கா­ரி­ய­வசம், மங்­கள சம­ர­வீர, தலதா அத்­துக்­கோ­ரள, தயா கமகே, சாகல ரட்­நா­யக்க, ஆகியோர் உட்பட பல அமைச்சர்கள் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.