Breaking News

மிக விரைவில் தெரிவிப்பதாக - சபாநாயகர்

எதிர்க்கட்சி தலைவர் பதவி விடயமாக கட்சித் தலைவர்களுடன் கலந்துரை யாடிய பின் சட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக இவ் வாரமளவில் இறுதி முடிவினை தெரிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளாா்.

எதிர்க்­கட்சி தலைவர் பதவி குறித்து நேற்று பாராளுமன்றில் பெரும் சர்ச்சை ஏற்­பட்டது. அதிக ஆச­னங்­களை கொண்ட குழு என்ற அடிப்­ப­டை யில் தமக்கே எதிர்க்­கட்சி தலைவர் பதவி வழங்­கப்­பட வேண்டுமெனக் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் கோரிக்கை விடுத்­துள்ளனா். 

சபாநாயகர் மேற்கண்ட அறிவிப்பினை விடுத்ததுடன் எந்தவொரு அழுத்தமும் என்மீது பிரயோகிக்கப்படவில்லை. நான் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட் டேன் எனத் தெரிவித்துள்ளாா்.