Breaking News

விக்கி மீது குற்றச்சாட்டு - சுமந்திரன்

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி திட்டங்களின் விசேட ஜனாதிபதி செயலணி யுடனான சந்திப்பு தொடா்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. 

இச் செயலணி என்ன செய்யப் போகி ன்றது என்பது குறித்தும் எமக்கு ஒன் றுமே தெரியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப் பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளாா்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான விசேட ஜனா திபதி செயலணிக் கூட்டம் நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி தலை­மையில் நடைபெற்றுள்ளது.

இதில் வடக்கு கிழக்கை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள், அமைச்­சர்கள், ஆளு­நர்கள் மற்றும் பாது­காப்பு தரப்­பினர் கலந்துள்ள தாக எனினும் இக் கூட்­டத்தில் வடக்கு முதல்வர் சி.வி விக்­கி­னேஸ்­வரன் கலந்­து­கொள்­ள­வில்லை. 

அதே­போன்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொள்­ள­வில்லை. இந்­நி­லையில் இச் செய­லணி திட்­டங்கள் குறித்தும் தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்பு பங்கு கொள்­ளாமை குறித்தும் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே தெரிவித்துள்ளாா். 

 மேலும் கூறு­கையில், 

வடக்கு கிழக்கு அபி­வி­ருத்தி தொடர்­பான ஜனா­தி­பதி செய­லணி குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு எதுவும் தெரி­யாது. எம்மை அழைக்­கவும் இல்லை. இத் திட்­டங்கள் குறித்து எமது கட்­சிக்கு அறி­விக்­கவும் இல்லை. ஆகவே ஜனா­தி­பதி செய­லணி எவ்­வா­றா­னது. அதன் வேலைத்­திட்­டங்கள் குறித்து எமக்கு எக் கருத்­தையும் முன்­வைக்க முடி­யாது. 

வடக்கு கிழக்கு அபி­வி­ருத்­திகள் குறித்து நாமும் தொடர்ச்­சி­யாக அர­சாங்­கத்­துடன் கடந்த காலங்­களில் இருந்து பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­துள் ளோம். ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகி­யோ­ருடன் எதிர்க்­கட்சி தலைவர் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­துள்ளார். 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் தொடர்ச்­சி­யாக நாம் வடக்கு - கிழக்கு அபி­வி­ருத்தி குறித்து பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­துள்ளோம். இந்­திய வீட்­டுத்­திட்டம் குறித்து நாம் அழுத்தம் கொடுத்த வண்­ணமே உள்ளோம். ஐரோப்­பிய ஒன்­றிய வீட்­டுத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டுமெனக் கோரி க்­கை­களை முன்­வைத்­துள்ளோம். 

எனினும் ஜனா­தி­பதி விசேட செய­லணி என்ன செய்­யப்­போ­கின்­றது என்­பது எமக்குத் தெரி­யாது. வடக்கு முதல்வர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் குறித்த கூட்­டத்தில் கலந்­து­கொள்­ள­வில்லை என ஊட­கங்­களில் அறிய முடிந்­தது. வடக் குக் கிழக்கு பிர­தி­நி­தி­களை புறக்­க­ணிப்­பதால் தான் இக் கூட்­டத்தில் கலந்­து­கொள்­ள­வில்லை என்ற கருத்­தையும் முன்­வைத்­துள்ளார். 

ஆனால் ஜனா­தி­பதி செய­லணி விக்­கி­னேஸ்­வ­ரனை புறக்­க­ணிக்­க­வில்லை. அவர் தான் கூட்டத்தை புறக்கணித்தாகவும் ஜனாதிபதி செயலணி பக்கம் தவ றுகள் இருப்பதாக தெரியவில்லை. வடக்கு மாகாண முதல்வர் என்ற ரீதியில் அவர் பங்கேற்று இருக்கலாமெனத் தெரிவித்துள்ளாா்.