Breaking News

நைல் நதியில் மூழ்கி 22 சிறாா்கள் பலி!

சூடானில் நைல் நதியில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாட சாலை சிறுவர்கள் 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

சூடான் தலைநகர் பகுதியிலிருந்து 750 கிலோ மீற்றர் வடக்கே அமைந்த நைல் நதியில் 40க்கும் மேற்பட்ட பாட சாலைக்குச் செல்லும் சிறுவர்கள் பயணித்த படகே விபத்துக்குள்ளாகி யுள்ளது. 

இந்நிலையில், இயந்திரக் கோளாறு காரணமாக பாதி வழியில் பழுதாகி நின்ற படகு திடீரென தண்ணீரில் கவிழ்ந்ததினால் படகில் பயணம் செய்த பாட சாலை சிறுவர்களில் 22 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளதுடன் குறித்த விபத்தில் பெண் ஒருவரும் உயிரிழந் துள்ளார்.