Breaking News

கிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி ஒருவா் பலி.!

சிறிலங்கா இராணுவத்தினரின் டிரக் வண்டியொன்றினால் 51 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சியில் பதற்றம் நிலை நிலவியுள்ளது. 

சம்பவ இடத்திற்கு பல பொலிசாரும், இராணுவத்தினரும் விரைந்து வந்தது டன் டிரக் வண்டியை ஓட்டிச்சென்ற இரா ணுவ சாரதியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிசார் வழங்கிய வாக்குறுதியை அடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் 155ம் கட்டை பகுதியில் ஓகஸ்ட் 15 ஆம் திகதியான இன் றைய தினம் புதன்கிழமை மாலை இந்த விபத்து நடைபெற்றுள்ளது. கிளி நொச்சியிலிருந்து இரணைமடு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதே திசையில் சென்ற இராணுவத்தினரின் டிரக் ரக வாகனம் மோதியே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 51 வயதான க.குகனேஸ்வரன் என்ற 5 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் இராணுவ டிரக் வண்டியை செலுத்தி வந்த இராணுவ சிப்பாயை தாக்க முற் பட்டதால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

எனினும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விபத்துடன் தொடர்புபட்ட இராணுவ சாரதியை கைது செய்ததுடன், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் வாக்குறுதி அளித்தனர். இதனை யடுத்து பொலிசாரின் வேண்டுகோளுக்கு இணங்க மக்கள் கலைந்துள்ளனா்.